வரலாற்றில் முதன்முறையாக பதில் ஜனாதிபதியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிப்பு!

Date:

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பதில் ஜனாதிபதியின் செயலாளராக சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (20) பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...