விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை: சிகிச்சை நடவடிக்கைகள் பாதிப்பு !

Date:

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

பிரதான வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் சுமார் 30 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தற்போது ஓய்வு பெற்றுள்ள விசேட வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த முடியுமாக என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...