ஹிஜ்ரி 1445 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை மாநாடு செவ்வாயன்று!

Date:

ஹிஜர் 1445 புனித முஹர்ரம் யாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 18.07.22 (புனித துல் ஹிஜ்ஜஹ்; 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் எம்.பி.எம். அல் பத்தாஹி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டின் இறுதித் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்ப்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் பாரிஸ் பஹ்மி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ பகிர்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தோடு பிறை சம்பந்தமாக மேலதிக தகவல்களுக்கு 0112432110, 0112451245, 0777316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம்தொடர்பு கொள்ள முடியும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...