அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் மரணம்!

Date:

அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட நிலையில் சிறையில் வைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

59 வயதான மொஹமட் நதீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்பதுடன், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 2019 ஆகஸ்ட்டில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...