அஸ்வசும நலன்புரி திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 982,770 மேன்முறையீடுகளும் 62,368 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்காத அஸ்வசும நலன்புரி திட்டத்தின் பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.