இந்த ஆண்டில் 1126 வாகன விபத்துக்கள் பதிவு : 1192 பேர் மரணம்

Date:

இவ்வாண்டில் ஆரம்பம் தொடக்கம் இது வரையில் வாகன விபத்துக்களால் 1192 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவ்வருட ஆரம்பத்தில் இருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் பதிவான வாகன விபத்துக்களில் பொலிஸாருக்கு பதிவான வாகன விபத்துக்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்தும் போது, அவற்றில் பெரும்பாலானவை வாகன சாரதிகளின் கவனயீனத்தால் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய 1126 விபத்துக்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மிகக் குறுகிய வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதனாலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தினாலும் அண்மைய நாட்களில் பல விபத்துக்கள் பதிவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால், வருடந்தோறும் ஏற்படும் வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...