இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது!

Date:

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து தூதரகங்களை இந்தமாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் முன்னதாக அறிவித்தது.

ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல தூதரகங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியது.

அத்துடன், இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் தீர்மானமானது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என நோர்வே தூதரகம் தெரிவித்தது.

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...