இலங்கையில் பிறந்த பிபிசி செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்!

Date:

இலங்கையில் பிறந்த பிபிசியின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார்.

பிபிசியின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான அவர், இரண்டு தசாப்தங்களாக பிபிசி செய்தியை தயாரித்து வழங்கியதுடன், வெளிநாட்டு நிருபராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் பிறந்நத ஜோர்ஜ் அழகையா கானாவிற்கு குடிபெயர்ந்த பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் பிபிசியில் பணியாற்றியுள்ளார்.

சோமாலியா, ஈராக், ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக ஜோர்ஜ் அழகையா விருதுகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...