இலங்கை – ஈரானுக்கிடையில் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்தும் கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான  சமய,கலாசார, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் விதுர விக்ரமநா யக்க மற்றும் ஈரான் கலாசார நிலையத்தின் ஆலோசகர் கலாநிதி மொசாம் சுதர்ஷினி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று  இவ்வாரம் கொழும்பு ஈரான் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான  சமய, கலாசார, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரான் கலாசார நிலையத்தின் கலாசார ஆலோசகர் லாநிதி மொசாம் சுதர்ஷினியை சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன் பயனாக பல வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கின்றன.

அத்துடன் தொல்லியல் காப்பகங்கள், அருங் காட்சியகங்கள் மற்றும் பிற கல்வித் துறைகளுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், மத ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான யாத்திரை பரிமாற்ற நிகழ்ச்சிகள்.

மேலும் இரு நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட உயர்தர திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தல் போன்றவை குறித்தும் கலந்துரையாடினோம். என்றார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...