இலங்கை – ஈரானுக்கிடையில் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்தும் கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான  சமய,கலாசார, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் விதுர விக்ரமநா யக்க மற்றும் ஈரான் கலாசார நிலையத்தின் ஆலோசகர் கலாநிதி மொசாம் சுதர்ஷினி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று  இவ்வாரம் கொழும்பு ஈரான் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான  சமய, கலாசார, விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரான் கலாசார நிலையத்தின் கலாசார ஆலோசகர் லாநிதி மொசாம் சுதர்ஷினியை சந்தித்து கலந்துரையாடினோம்.

இதன் பயனாக பல வேலைத்திட்டங்கள் எதிர்வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கின்றன.

அத்துடன் தொல்லியல் காப்பகங்கள், அருங் காட்சியகங்கள் மற்றும் பிற கல்வித் துறைகளுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம், மத ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான யாத்திரை பரிமாற்ற நிகழ்ச்சிகள்.

மேலும் இரு நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட உயர்தர திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தல் போன்றவை குறித்தும் கலந்துரையாடினோம். என்றார்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...