இலங்கை ஜனாதிபதியுடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பாகிஸ்தான் ஜனாதிபதி!

Date:

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று  திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த இலங்கை ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பிராந்திய அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கையின் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தானின் கடினமான பொருளாதார சூழ்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதி பாராட்டினார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...