இலங்கை தெற்கு கடற்பரப்பில் பலமான நில அதிர்வு!

Date:

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஓரளவு பலமான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்காக 1200 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12:29 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.8 மெக்னிடியூட் என்ற அளவில் உணரப்பட்டதாகவும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதன் தாக்கம் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ, காலி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...