இலங்கை ரக்பி தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25ஆம் திகதி விசாரணைக்கு!

Date:

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ரக்பி (SLR) மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரும் SLR தலைவருமான ரிஸ்லி இல்யாஸ் தாக்கல் செய்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினம் விசாரிக்கவுள்ளது.

ஜூலை 14 அன்று, இலங்கை ரக்பியின் நிர்வாகம் மற்றும் விவகாரங்களில் விளையாட்டு அதிகாரிகள் தலையிடுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவு ரிட் மனுவின் இறுதி முடிவு வரை அமுலில் இருக்கும்.

இலங்கை ரக்பி மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் இலங்கை ரக்பியின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விளையாட்டு அமைச்சரால் வெளியிடப்பட்ட 11.04.2023 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து மனுதாரர்களான இலங்கை ரக்பி (SLR), SLR தலைவர் ரிஸ்லி இல்யாஸ் மற்றும் SLR இன் ஏனைய ஏழு அலுவலக பணியாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் சார்பாக கலாநிதி பைஸ் முஸ்தபா பி.சி., சட்டத்தரணி கீர்த்தி திலகரத்ன, சட்டத்தரணி பண்டுக கீர்த்தினாந்த ஆகியோர் ஆஜராகினர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சட்டத்தரணி சுமதி தர்மரத்ன ஆஜராகியிருந்தார். உதித இகலஹேவா பி.சி., 4 முதல் 12 வது பிரதிவாதிகளுக்காக ஆஜரானார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...