மூன்றரை மாதக் குழந்தையுடன் கொழும்பு செல்ல வந்த இஜாஸின் பயணம் மனம்பிட்டியில் அடங்கிய சோகம்

Date:

பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த றபியுடீன் இஜாஸ் (29) மறுநாள் தன் மனைவியோடு கொழும்பு சென்று தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.

இளம் ஊடகவியலாளரான இஜாஸ் ஒலுவில் – 04 ஆம் பிரிவில் வசித்து வந்தவர். இவருக்கு மூன்றரை மாதம் நிரம்பிய (3 1/2) முகம்மத் சயான் இல்மு என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

இம்போர்ட் மிரர் இணைய வானொலியில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்தார்.இவரது மனைவி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் மாணவியாக இருக்கின்றார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைபுரிந்து வந்த நிலையில் அங்கு மனைவியையும் குழந்தையும் கொழும்புக்கு அழைத்துக்கொண்டு செல்வதற்காக

பஸ்ஸில் வந்தார்.

தான் பஸ்ஸில் ஊர் நோக்கி வருவதாகவும் கொழும்பில் பார்த்த வீட்டில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பெட்டியில் வைத்து அடிக்கி தயார் பண்ணுமாறும், வந்தவுடன் மீண்டும் கொழும்புக்கு (திங்கட்கிழமை 10) செல்ல வேண்டும் எனவும் மனைவியுடன் கூறினார்.

இதற்கு அமைவாக மனைவி கொழும்பு சென்று தங்குவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்த போதே மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இவரின் அகால மரணச் செய்துகட்டு ஒலுவில் பிரதேசம் எங்கும் மக்கள் கவலையுடன் துக்கம் அடைந்தவர்களாக ஒலுவில் ஊரே சோகமாயமாக காணப்படுகிறது.

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...