ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் படி 100 மில்லியன் அபராதத்தில் 15 மில்லியனை செலுத்தினார் மைத்திரி

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.

100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், இந்த தொகை (15 மில்லியன் ரூபா) நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ஓய்வூதியமாக 97,500/- ரூபாவையும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொடுப்பனவுகள் நீங்கலாக 54,285 ரூபாவையும் வருமானமாகப் பெறுவதாக மைத்திரிபால தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாவில், தலா 10 மில்லியன் ரூபா மற்றும் 5 மில்லியன் ரூபா வீதம், 15 மில்லியன் ரூபா ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஞ்சிய 85 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...