உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் 8300 மெட்ரிக் தொன் யூரியா நன்கொடை!

Date:

8300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த யூரியா உரத்தொகையானது, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது.

இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் விவசாயிகளுக்கு 15000 மெட்ரிக் தொன் வரையான யூரியா உரம், உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...