உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை: அலி சப்ரி

Date:

உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ இந்திய விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய ரூபாவை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

இந்திய ரூபாவின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையின்மை இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வது இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் .

எனவே உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவது வர்த்தக ரீதியில் இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மொத்தக் கடன் 83 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது, இதில் 41.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு மற்றும் 42.1 பில்லியன் டொலர் உள்நாட்டு கடன். இலங்கை தற்போது தனது கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...