ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு!

Date:

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று(04) காலை 10.30க்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஊடக அடக்குமுறையின் மற்றுமொரு நடவடிக்கையாக தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்படுவது இது மூன்றாவது தடவை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...