கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

Date:

 45 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோரால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டது.

‘தரமற்ற’ மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத் துறை பலவீனமடைந்து நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக சுகாதார அமைச்சர் இருக்கிறார். ஆகவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த பின்புலத்திலேயே இன்று குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாராயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...