சப்ரகமுவ ஆசிரியர்கள் மேலதிக தனியார் வகுப்புக்கள் நடத்த தடை!

Date:

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் தமது வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களை, தாம் நடத்தும் தனியார் மேலதிக வகுப்புக்களில் இணைத்துக் கொள்ள ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தை அவ்வாறே அமுல்படுத்துமாறு மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தமது பாட விடயதானங்களை மேலதிக வகுப்புக்களின் ஊடாக மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கே சப்ரகமுவ மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார்.

பாடசாலைகளில் கற்பிக்கும் விடயதானங்களை அதே ஆசிரியர், பணத்தை பெற்றுக்கொண்டு நடத்தும் தனியார் மேலதிக வகுப்புக்களுக்கு, இதற்கு முன்னர் இருவேறு சந்தர்ப்பகளில் சுற்று நிரூபங்களின் ஊடாக தடை விதிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக இரத்தினபுரி மாவட்ட இணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்துக்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்தே, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...