தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய அடையாளம் சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.