ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி?

Date:

அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரியவருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக உருவாக்கப்படும் இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா செயற்படுவார் என அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியில் இணையவது சம்பந்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் சில சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன் மேலும் சில பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இளம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...