நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள்!

Date:

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சுமார் 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் அனைத்தும் 2023ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றவையாகும்.

1960 என்ற இலக்கத்தின் ஊடாக 9,774 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை நேரடியாக கிடைக்கப்பெற்றவையாகும்.

இதுவரை சுமார் 1800 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக அதிகாரத்தை பிரயோகித்தமை, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை காணத் தவறியமை, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்தமை ஆகியன இந்த முறைப்பாடுகளில் பிரதான குற்றச்சாட்டுகளாக உள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் தவறுகள் தொடர்பிலான எந்தவொரு விடயம் குறித்து பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய முடியும்.

சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுக்கும்.

1960 தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...