பாகிஸ்தானுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
ரவிந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார்.
முன்னாள் கடற்படை தளபதியான அவர், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், ரவிந்திர விஜேகுணரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.