இலங்கையில் கடல் சார் மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் திட்டம் தொடர்பான முழு நாள் செயலமர்வொன்று புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (ஆர்.டி.எப்) கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்றது.
சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் சீ.டி.எஸ்.நிறுவனம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுவை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் பிரதான வளவாளர்களாக மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளான சுகத் அமரசிங்க மற்றும் எஸ்.ஐ.மதூஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் இந்திராணி குசுமலதா இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.
புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
(எம்.யூ.எம்.சனூன்)