புத்தளம் சாஹிரா பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு!

Date:

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் 1980ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் பழைய மாணவர் அமைப்பான “80 ஸ் சஹீரியன்ஸ் ஹீரோஸ்” அமைப்பின் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கடந்த 30 ஆம் திகதி புத்தளம் நூர் நகரில் அமைந்துள்ள அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் எம்.எஸ்.எம்.யாசிர் (வை.எம். நிறுவனர்) அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் இணை தலைவர்களான புத்தளம் அசன்குத்தூஸ் பாடசாலை அதிபர் எம்.மொஹிதீன் மற்றும் ஆர்.எம்.பவாஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் 30 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

80’s சஹீரியன்ஸ் ஹீரோஸ் அமைப்பினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சமூக நல திட்டங்கள் குறிப்பாக கல்வி மேம்பாடுகள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டு கல்வி குழு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்புகளில் மிக பழைமை வாய்ந்த அமைப்பாகவும், அனுபவஸ்தர்களை உள்ளடக்கிய அமைப்பாகவும் 80’s சஹீரியன்ஸ் ஹீரோஸ் விளங்குகிறது.

மேற்படி நிகழ்வின் இர போசனத்துக்கான அனுசரனையினை அங்கத்தவர் எம்.எஸ்.எம்.யாசிர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...