இவ் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் குறித்த கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி இவ் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.