மட்டக்குளி பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்: பயணிகள் பாரிய சிரமத்தில்!

Date:

மட்டக்குளியிலிருந்து கங்காராம நோக்கி பயணிக்கும் 145ம் வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

போபிட்டிய – புறக்கோட்டைக்கு இடையிலான பஸ், தமது பயணிகளையும் ஏற்றி செல்வதனால், தமது வருமானம் ஈழக்கப்படுவதாக தெரிவித்தே இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த வீதியூடாக பயணித்த 155ம் வீதி இலக்க பஸ்கள் கொவிட் காலத்திற்கு பின்னர் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமையினால், இந்த வீதியூடாக 145ம் வீதி இலக்க பஸ்கள் மாத்திரமே பயணிக்கின்றன.

இதனால், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமக்கான போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...