மதுபான கடை திறப்பதற்கு எதிராக சம்மாந்துறை மல்வத்தை பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக மக்கள் இன்று புதன்கிழமை (05) கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுத்தனர்.
மல்வத்தை சந்தியில் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக  காலை முதல் மல்வத்தை சந்தியில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் வளத்தாப்பிட்டி மல்லிகைத்தீவு மல்வத்தை புதுநகர் கனபதிபுரம் 26ம்குளனி சடயந்தலாவ போன்ற பிரதேச மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மஜீட்புரம் பள்ளிவாசல்களிலும் நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

அதற்கமைய காலை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் இணைந்த ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில்...

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை...

கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நிமிடங்களுக்கு முன்பு...

ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...