அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.
வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதில் குறைந்தபட்சம் 2 பேர் பலியானதுடன், மேலும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ,பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடிக்கு சென்ற பஸ் ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.