யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான ஆசன முன்பதிவு சேவை மீண்டும் ஆரம்பம்!

Date:

அநுராதபுரதம் – ஓமந்தைக்கு இடையிலான ரயில் சேவைகள் நாளை மறுதினம்(15)  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான  ரயில் பாதையிலான போக்குவரத்து  கடந்த ஜனவரி மாதம்    புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது.

62 கிலோ மீற்றர் தூரம் புனரமைக்க இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்டதன் பின்னர் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கொழும்பு ரயில்களுக்கான  ஆசன முன்பதிவு சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...