லிபியாவின் தலைநகர் திரிபோலியில் லண்டன் சிறுவர் நல வைத்தியர்களால் குழந்தைகளுக்கு இலவச இருதய நோய் சத்திர சிகிச்சை!

Date:

கடந்த பல வருடங்களாக லிபியாவில் ஆட்சித் தலைவராக இருந்த முகம்மர் கடாபி உடைய மரணத்தைத் தொடர்ந்து லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் , சர்வதேச நிவாரண அமைப்புக்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் லண்டனை மையமாகக் கொண்டு செயல்படுகின்ற ஒரு சமூக சேவை அமைப்பு நேற்று லிபியாவின் தலைநகரான திரிபோலியில் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற குழந்தைகளுக்கான இலவச சத்திர சிகிச்சை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இம் மனிதாபிமான நிகழ்வில் லண்டனில் செயல்படுகின்ற, பணி புரிகின்ற பல நாடுகளையும் சேர்ந்த 10 வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், சிறுவர் நோய் நல நிபுணர்கள் கலந்து கொண்டு இவ் இலவச இருதய நோய் நிவாரண சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இவ் வைத்திய குழுவில் இலங்கையைச் சேர்ந்த பிரபல சிறுவர் நோய் நிபுணரான Dr. ரயீஸ் முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: Dr. ரயீஸ் முஸ்தபா (திரிபோலி நகரில் இருந்து)

Video: 👇 click photo

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...