வட்டியில்லா கல்வி கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான மாணவர் கையேட்டைப் பரிசீலனை செய்து அனைத்து தகவல்களை பெற முடியும்.

அத்துடன் 070-3555970-79 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...