விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலையில் 263 பாலங்கள்: வீதி அபிவிருத்தி அதிகார சபை

Date:

நாட்டிலுள்ள பிரதான வீதிகளில் விஸ்தரிக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பாலங்களை விரிவுபடுத்துவதற்காக 15.3 பில்லியன் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதுதவிர சேதமடைந்த நிலையில் காணப்படும் 135 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றை புனரமைக்க 12.3 மில்லியன் ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களுக்கான நிதியை விரைவாக வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நிதி கிடைத்தவுடன் பாலங்களின் புனரமைப்பு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பொலன்னறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து பஸ்ஸொன்று ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40-இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...