ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை தருஷி!

Date:

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

24ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தருஷி கருணாரத்ன, 800 மீற்றர் போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய ஆசிய சாதனையை தன்வசமாக்கினார்.

இதேவேளை இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...