ஆற்றில் விழுந்து காணாமல் போன கொழும்பு யுவதி

Date:

திஹாரிய பிரதேசத்தில் அந்தககல்ல ஓய ஆற்றின் படித்துறைக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 21 வயதான யுவதி கால் வழுக்கி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன யுவதி தனது இரண்டு தோழிகளுடன் திஹாரிய பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளதுடன் தோழிகளுடன் அந்தகல்ல ஓயாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஆற்றின்படித்துறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த போது கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேவாசிகள் காணாமல் போன யுவதியை தேடி வருகின்றனர்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...