இதய அறுவை சிகிச்சைக்காக 2500 குழந்தைகள் காத்திருப்போர் பட்டியலில்!

Date:

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய 2500 சிறுவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஜி. விஜேசூரிய குறிப்பிடுகிறார்.

இதய நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படும் குறைந்தது 5 குழந்தைகளாவது ஒவ்வொரு நாளும் இதய நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 5 குழந்தைகளுக்கு மாத்திரமே இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியும் என சுட்டிக்காட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர், சத்திரசிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக லிட்டில் ஹார்ட் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட 11 மாடிக் கட்டிடப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இப்பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டாலும், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அடுத்த ஆண்டு இறுதி வரை கட்டுமானப் பணிகள் தாமதமாகலாம், எனவே இதனை முடிக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

நாட்டின் குழந்தைகளின் நலன் கருதி இதற்கு பங்களிக்க முன்வரவேண்டும் என நன்கொடையாளர்களிடம் லிட்டில் ஹார்ட் ஃபண்ட் கேட்டுக்கொள்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...