இம்முறை தேசிய மீலாத் விழாவை மன்னாரில் நடத்த விதுர விக்ரமநாயக்க தீர்மானம்!

Date:

இந்த ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை செப்டெம்பர் 28ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார  அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தீர்மானத்துக்கு அமைய தேசிய மீலாத் விழா கொண்டாட்டங்களுக்கென மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இவ் வைபவங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம்.பைசல் தலைமையில் அதிகாரிகள் குழு ஏற்கனவே களப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த வைபவத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், தூதுவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்க உள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...