இலங்கை ரக்பி தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25ஆம் திகதி விசாரணைக்கு!

Date:

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ரக்பி (SLR) மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரும் SLR தலைவருமான ரிஸ்லி இல்யாஸ் தாக்கல் செய்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினம் விசாரிக்கவுள்ளது.

ஜூலை 14 அன்று, இலங்கை ரக்பியின் நிர்வாகம் மற்றும் விவகாரங்களில் விளையாட்டு அதிகாரிகள் தலையிடுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவு ரிட் மனுவின் இறுதி முடிவு வரை அமுலில் இருக்கும்.

இலங்கை ரக்பி மற்றும் அதன் தலைவர் ரிஸ்லி இல்யாஸ் இலங்கை ரக்பியின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விளையாட்டு அமைச்சரால் வெளியிடப்பட்ட 11.04.2023 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து மனுதாரர்களான இலங்கை ரக்பி (SLR), SLR தலைவர் ரிஸ்லி இல்யாஸ் மற்றும் SLR இன் ஏனைய ஏழு அலுவலக பணியாளர்கள் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் சார்பாக கலாநிதி பைஸ் முஸ்தபா பி.சி., சட்டத்தரணி கீர்த்தி திலகரத்ன, சட்டத்தரணி பண்டுக கீர்த்தினாந்த ஆகியோர் ஆஜராகினர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் சிரேஷ்ட மேலதிக சட்டத்தரணி சுமதி தர்மரத்ன ஆஜராகியிருந்தார். உதித இகலஹேவா பி.சி., 4 முதல் 12 வது பிரதிவாதிகளுக்காக ஆஜரானார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...