மூன்றரை மாதக் குழந்தையுடன் கொழும்பு செல்ல வந்த இஜாஸின் பயணம் மனம்பிட்டியில் அடங்கிய சோகம்

Date:

பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த றபியுடீன் இஜாஸ் (29) மறுநாள் தன் மனைவியோடு கொழும்பு சென்று தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.

இளம் ஊடகவியலாளரான இஜாஸ் ஒலுவில் – 04 ஆம் பிரிவில் வசித்து வந்தவர். இவருக்கு மூன்றரை மாதம் நிரம்பிய (3 1/2) முகம்மத் சயான் இல்மு என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.

இம்போர்ட் மிரர் இணைய வானொலியில் அறிவிப்பாளராகவும் கடமை புரிந்தார்.இவரது மனைவி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடம் மாணவியாக இருக்கின்றார்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைபுரிந்து வந்த நிலையில் அங்கு மனைவியையும் குழந்தையும் கொழும்புக்கு அழைத்துக்கொண்டு செல்வதற்காக

பஸ்ஸில் வந்தார்.

தான் பஸ்ஸில் ஊர் நோக்கி வருவதாகவும் கொழும்பில் பார்த்த வீட்டில் தங்குவதற்கு தேவையான பொருட்களை பெட்டியில் வைத்து அடிக்கி தயார் பண்ணுமாறும், வந்தவுடன் மீண்டும் கொழும்புக்கு (திங்கட்கிழமை 10) செல்ல வேண்டும் எனவும் மனைவியுடன் கூறினார்.

இதற்கு அமைவாக மனைவி கொழும்பு சென்று தங்குவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் இருந்த போதே மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இவரின் அகால மரணச் செய்துகட்டு ஒலுவில் பிரதேசம் எங்கும் மக்கள் கவலையுடன் துக்கம் அடைந்தவர்களாக ஒலுவில் ஊரே சோகமாயமாக காணப்படுகிறது.

பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...