சட்டவிரோத குடிபெயர்வில் ஈடுபடவேண்டாம் : அவுஸ்திரேலியா அதிகாரிகள் வலியுறுத்தல்

Date:

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு அச்சுறுத்தலானா நிலையில் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்படும் என அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களில் சடுதியாக அதிகரித்ததையடுத்து, அதனைத் தடுப்பதற்குரிய கூட்டிணைந்த நடவடிக்கைகளை இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன என அவுஸ்திரேலியாவின் கூட்டு முகவர் பணிக்குழுவினால் எல்லைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்ற ஆட்கடத்தலை முறியடிப்பதற்கு இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகமுக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஆட்கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதை இலக்காகக்கொண்ட இலங்கையின் செயற்பாடுகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை என்று தெரிவித்த அவர், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்துக்கு நன்மை செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக பின்தங்கிய நிலையிலுள்ள மக்களைப் பயன்படுத்தி பெருமளவு பணம் உழைத்துக்கொள்வதை மாத்திரமே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

2009 இல் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து பெருமளவானோர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் குடிப்பெயர்ந்ததுடன் அவர்களில் பெரும்பாலானோர் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர்.

அதனையடுத்து இச்சட்டவிரோத குடிப்பெயர்வைத் தடுத்து நிறுத்துவதற்கு இருநாடுகளும் கூட்டிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைளின் பலனாக கடந்த சில வருடங்களாக இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...