சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்ட கடன் செப்டெம்பரில் கிடைக்கும்!

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விரைவான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதால் எதிர்வரும் செப்டெம்பரில் இரண்டாம் கட்ட கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடாக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

”சர்வதேச நாயண நிதியத்தின் முதல் தவணை கடன் மாத்திரமே இலங்கைக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளது.

அடுத்தகட்ட தவணை கடன்களை பெற்றுக்கொள்ள பல நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. என்றாலும், அவர்கள் வழங்கியுள்ள பல்வேறு நிபந்தனைகளை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம்.

வரி மறுசீரமைப்பு என்பது இதில் பிரதானமான ஒன்றாகும். வரி மறுசீரமைப்பின் ஊடாக அரச வருவாய் அதிகரித்துள்ளதுடன், நட்டமீட்டும் பல்வேறு அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைப்பதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கியுள்ளோம்.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...