நஷ்டத்தில் இயங்கும் பேருந்து டிப்போக்கள் மூடப்படும்

Date:

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இலாபம் பெறும் நிலைமையை அடையாத இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பேருந்து டிப்போக்களும் மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இலங்கையில் உள்ள போக்குவரத்து சபைகளின் சகல பேருந்து டிப்போக்களும் இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இலங்கையில் தற்போது 119 பேருந்து டிப்போக்கள் இருக்கின்றன. அவற்றில் 39 பேருந்து சாலைகள் மாத்திரமே இலாபத்தில் இயங்கி வருகின்றன.

38 பேருந்து டிப்போக்கள் நஷ்டமும் இலாபமும் இன்றி இயங்கி வருகின்றன.

இதனால், தற்பொழுது நஷ்டத்தில் இயங்கும் பேருந்து டிப்போக்கள் இலாபமீட்டும் நிலைமைக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...