புத்தளத்தில் இடம்பெற்ற ‘கடல் சார் மனித கடத்தல் பற்றி விழிப்புணர்வு திட்டம்’ தொடர்பான செயலமர்வு!

Date:

இலங்கையில் கடல் சார் மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் திட்டம் தொடர்பான முழு நாள் செயலமர்வொன்று புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள கிராமிய அபிவிருத்தி அமைப்பின் (ஆர்.டி.எப்) கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்றது.

சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் சீ.டி.எஸ்.நிறுவனம் ஆகியன இணைந்து இந்நிகழ்வுவை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் பிரதான வளவாளர்களாக மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் விசாரணை பிரிவின் அதிகாரிகளான சுகத் அமரசிங்க மற்றும் எஸ்.ஐ.மதூஷான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் இந்திராணி குசுமலதா இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...