மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை: கல்வி அமைச்சர்

Date:

புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் , விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பிரிவுகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகளுக்கும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், மொத்தம் 7,342 புதிய ஆசிரியர் நியமனங்கள் அரசால் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக, பல பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை பூர்த்தி செய்ய முடியாது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...