ரிஜ்வே OPD வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!

Date:

கொழும்பு ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் (OPD) இன்று காலை 08.00 மணிமுதல் 24 மணித்தியால அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்க தலைவர் மற்றும் ஊடகபேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சிறுவர் வைத்தியசாலையான ரிஜ்வேயில் இதுவரை காலம் பணி பகஸ்கரிப்பு இடம்பெற்றிருக்கவில்லை. ஏதேனும் ஒரு காரணத்துக்காக பணி பகிஸ்கரிப்பு நடைபெறுகின்ற போதிலும் சிறுவர் வைத்தியசாலையில் ஒரு போதும் பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை.

இதுவரைகாலமும் நாம் பயன்படுத்தாத மருந்துகளை பாவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் நாம் இது தொடர்பில் கதைத்திருந்தோம் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தோம். வழங்கப்பட்ட தீர்வினை நம்பினோம். ஆனாலும் இதுவரை காலமும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

எனவே பொய்யான வாக்குறுதிகளுக்கு அமைய எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியாது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் எட்டாம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தனகேற்ற வகையில் செயற்பட்டு வருகின்றார்.

நோயாளர்களை அவர் தொடர்ந்து அசௌகரிய நிலைக்கு உள்ளாக்குகிறார். எவ்வாறாயினும் சீமாட்டி ரிஜ்வே அவரச பிரிவு தொடர்ந்து இயங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆனாலும், குறித்த பணிபகிஸ்ரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...