வட்டியில்லா கல்வி கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான மாணவர் கையேட்டைப் பரிசீலனை செய்து அனைத்து தகவல்களை பெற முடியும்.

அத்துடன் 070-3555970-79 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...