வைத்தியர்கள் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்படும்?

Date:

நாட்டில் தற்போது காணப்படும் வைத்தியர்கள் பற்றாக்குறையால் 50க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் நலிந்த ஜய திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 600 அரச வைத்தியர்கள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 1500 தொடக்கம் 1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டுக்குள் 418 இயன் வைத்தியர்கள் காணப்பட வேண்டிய நிலையில் தற்போது 240 பேர் உள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர்களில் 22 பேர் ஓய்வு பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 247 சத்திர சிகிச்சை நிபுணர்கள் காணப்பட்ட நிலையில், தற்போது 145 பேர் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 167 பேர் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் பணிபுரிய சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...