இந்தியாவிலேயே தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்ததே இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றுப் பிரகடனம்: மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் புகழாரம்!

Date:

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, இந்திய சுதந்திர தின நிகழ்வையொட்டி வெளியிட்டுள்ள டுவிட்டரில் தங்கள் தாயகத்தின் மீதான முஸ்லிம் சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அழுத்திக் கூறியுள்ளார்.

துஷார் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், 1947 இல் நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகக் கருதப்படும் வகையில் இந்தியாவை தமது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்த முஸ்லிம்கள் வெளிப்படுத்திய தேசத்தின் மீதான ஆழ்ந்த அன்பை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

வரலாற்றுச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில், துஷார் காந்தி வெளியிட்ட டுவிட்டரில் “1947-ல் முஸ்லிம்கள் தங்களின் பிறப்பிடமும் தங்கள் மூதாதையர்களின் பூமியுமான இந்தியாவிலேயே தொடர்ந்தும் இருப்பதைத் தேர்ந்தெடுத்தனர். அதுவே அவர்களின் தாய்நாட்டின் மீதும் தேசபக்தியின் மீதும் கொண்ட அன்பின் பிரகடனம். இந்துக்களுக்கு ஒருபோதும் அப்படியானதொரு சத்தியசோதனை அமையவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் என்ற முறையிலும், அவரது மூதாதையரின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர் என்ற வகையிலும் துஷார் காந்தியின் இந்தச் செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...