இன்னும் மூன்று வாரங்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை விநியோகிக்க முடியும்

Date:

மொத்த மின்சாரத் தேவையில் 12 சதவீதமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சந்திரிகா ஏரியிலிருந்து கட்டகடுவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வரும் பிரதான கால்வாயில் நீர் பாய்வதை அவதானிப்பதற்காக அண்மையில் அங்கு சென்ற போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யாவிட்டால் இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே நீர் மின்சாரம் வழங்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட ஏரிகள் முற்றாக வறண்டு விட்டதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து பிரதான நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைந்தபட்சமாக 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பருவ மழைக்கு முன்னதாக வறண்டு கிடக்கும் குளங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகள் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் 0.9 வீதமாகவும், உடவலவ நீர்த்தேக்கத்தில் 0.6 வீதமாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 30 வீதமாகவும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் 32 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் 26.5 வீதமாகவும், மொவறாகந்த நீர்த்தேக்கத்தில் 13.5 வீதமாகவும் செயற்படும் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் நீர் மின்சார உற்பத்தி கடந்த 19ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...