இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார் ஈரானிய ஜனாதிபதி!

Date:

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே சீராக வளர்ந்து வரும் உறவுகளைப் பாராட்டியுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானிய நிறுவனங்கள் இலங்கையில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மருத்துவத் துறைகளில் இஸ்லாமிய குடியரசுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வெளிவிகார அமைச்சர் அலிசப்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...